மதுரை: கீழக்கரையில் புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க 19, 20ல் முன்பதிவு செய்யலாம். புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை வரும் 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். புதிய மைதானத்தில் அரசின் நெறிமுறையை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்கவுள்ள மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் 19, 20ம் தேதிகளில் முன்பதிவு செய்ய வேண்டும்.
The post புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க 19, 20ல் முன்பதிவு..!! appeared first on Dinakaran.